சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=HlK5Udb1OqY

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.097   சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி
வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.

[1]
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்
உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம்,
வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.

[2]
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன்,
போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன்
பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-
சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.

[3]
இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர்
கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர்,
அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.

[4]
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-
நீறு பூசி நிலாமதி சூடிலும்,
வீறு இலாதன செய்யினும், விண்ணவர்,
ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.

[5]
உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப்
பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம்
பிச்சையே புகும் ஆகிலும், வானவர்,
அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.

[6]
ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!
கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.

[7]
எந்தையே! எம்பிரானே! என உள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்;
வெந்தநீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார், அடைந்தார்களே.

[8]
ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்
ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்;
தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே
வான நாடர் வணங்குவர், வைகலே.

[9]
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

[10]
ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;
அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே.

[11]
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்,
நாதனே, அருளாய்! என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[12]
ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ!
மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு
பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.

[13]
அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல்
புக்கு, பல்பலி தேரும் புராணனை-
நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-
தொக்க வானவரால்-தொழுவானையே.

[14]
கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன்
திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்;
இங்கணார், எழில் வானம் வணங்கவே;
அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!

[15]
ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!-
நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில்,
மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.

[16]
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்,
மரணம் எய்தியபின், நவை நீக்குவான்
அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?

[17]
ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்
சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்;
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.

[18]
இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்;
அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப்
பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை,
கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!

[19]
இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும்,
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த, அம் சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.

[20]
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்
கருமம் தான் கருமான்மறிக் கையினான்;
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!-
சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!

[21]
நமச்சிவாய என்பார் உளரேல், அவர்-
தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்,
அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும்,
இமைத்து நிற்பது சால அரியதே.

[22]
பல்பல் காலம் பயிற்றி, பரமனைச்
சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை
வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப்
புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.

[23]
மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்;
கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால்
பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!

[24]
இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர்,
நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்;
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.

[25]
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல்
கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?

[26]
அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு, தாவினான்,
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.

[27]
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்,
வளமை போய், பிணியோடு வருதலால்,
உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான்
கிளமையே கிளை ஆக நினைப்பனே.

[28]
தன்னில்-தன்னை அறியும் தலைமகன்
தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்;
தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில்,
தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.

[29]
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.

[30]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list